பள்ளிப்படிப்பில்
தேறியதும்
படிக்கவைப்பதா
வேண்டாமா?
ஆயிரம்
போராட்டங்கள்
எனக்கல்ல
என்...
பெற்றோருக்கு
அவர்களுக்கு கிடைத்த
கற்பிதங்களும்
இளைய தலைமுறை
மீதான பார்வையும்
வெறுப்பையே
தந்திருந்தன .
என்
தந்தையின்
கணோட்டம் வேறுபட்டது .
எப்போதும்
பெண்கள் வேலைக்கு
போவதை விரும்புவதில்லை .
பெண்கள்
அடிமையாக்கவேண்டும்
என்பதல்ல ...
பரபரப்பான
வாழ்க்கைமுறையில் ...
இருவரும் வேலைக்கு
சென்று
உணர்ந்து வாழயியலாமல் ....
சிக்கிதவிப்பதாய் ...
தேவையை
குறைத்து கொண்டு
முறையாக வீட்டையும்
குழந்தைகளையும் ...
மகிழ்வான
வாழ்க்கையையையும்
எல்லாவற்றையும்
முறையாக உணர்ந்து
வாழவேண்டும் ...
ஒவ் ஒரு கவளமும்
உண்ணும்போது
சுவையுணர்ந்து...
காற்று ...
மண் ..
விண்...
எல்லாவற்றையும் ...
அணு அணுவாய்
சுவைத்து ...
வாழவேண்டும் ...
என்பார் எதுசரி ?