இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 16 June 2012

13 .06 .2006



எல்லோருக்கும்
இயல்பாய்  விடிந்தது ...
எனக்குமட்டும்
புதுமையாய் பிறந்தது .

படிக்க வந்தேனா ....
படிப்பிக்க  வந்தேனா....
ஆயிரம்  ஐயங்கள்முன்னுள்.

நம்மிடையிலான  தொடர்புகள் ...
அன்றே  தோற்றங்க்கொண்டது.

வழமையான உன் ...
வெளிப்படையான
பேச்சை  சுவைப்பவள்  நான் .

கேட்டே வைத்தாய் ...
படிக்க வந்தாயா?
படிப்பிக்க  வந்தாயா?

என்பதிலே ...
உன்னை  மகிழ்வித்தத்து .

விடுமுறை  நாளில்
இருப்பை  விதவிதாமாய்
காட்டிக் கொண்டோம்.

கண்களில் காதலை
கடன் பெற்றோம் .

இதயத்தில் இடம்வாங்கி
குடியமர்ந்தோம்.

இன்றுவரை...
இணையாத  இருப்புப்
பாதையென ....

உன்னினைவோடு ...
தொடர்கிறதென்  பயணம்.

Monday 11 June 2012

கலப்புத் திருமணத்தை எதிர்ப்போம் ...



பன்றிகளுக்கும்
நாய்களுக்கும் ....
கழுதைகளுக்கும் ....
குதிரைகளுக்கும் ....
கோட்டான்களுக்கும் ...
மாடுகளுக்கும் ...
மனிதர்களுக்கும் ...
இடையிலான கலப்புத்
திருமணத்தை
தடுத்து  நிறுத்துவோம் .

இந்த  முறைமீறிய
திருமணம்  இங்கு
தேவையில்லை ...

தூய  மனிதத்திற்க்குள்ளே...
சமயங்க லேது ...
சாதி  தானேது ....
ஏற்றத்  தாழ்வுதான்
எது ?

Sunday 3 June 2012

ஐந்தாம் பொருத்தம்

ஐந்தாம் பொருத்தம்

எல்லோரும்  ஐந்தாம்
பொருத்தத்தை  சோதித்துவிட
ஆளாய் பறக்கும்
போது  அதைத் 
தட்டிக்கழித்தவன்  நீ .

நம்  இல்லறம்
நல்லற மாவதற்கான
ஒத்திகையை  நாளும்
உள்ளத்தில்
அரங்கேற்றம் 
செய்கின்றவன்  நீ.

வாழ்க்கைக்கான
கருப்பொருளை
தேனீக்கள்  போல
சேமிகிறவன்  நீ .

என் காதலும்  நீ .

காவிய
நாயகனும்  நீ .


 
ஐந்தாம் பொருத்தம்  யோனி பொருத்தம்  என்பது  தெரியாதா  என்ன  உங்களுக்கு ...