எல்லோருக்கும்
இயல்பாய் விடிந்தது ...
எனக்குமட்டும்
புதுமையாய் பிறந்தது .
படிக்க வந்தேனா ....
படிப்பிக்க வந்தேனா....
ஆயிரம் ஐயங்கள்முன்னுள்.
நம்மிடையிலான தொடர்புகள் ...
அன்றே தோற்றங்க்கொண்டது.
வழமையான உன் ...
வெளிப்படையான
பேச்சை சுவைப்பவள் நான் .
கேட்டே வைத்தாய் ...
படிக்க வந்தாயா?
படிப்பிக்க வந்தாயா?
என்பதிலே ...
உன்னை மகிழ்வித்தத்து .
விடுமுறை நாளில்
இருப்பை விதவிதாமாய்
காட்டிக் கொண்டோம்.
கண்களில் காதலை
கடன் பெற்றோம் .
இதயத்தில் இடம்வாங்கி
குடியமர்ந்தோம்.
இன்றுவரை...
இணையாத இருப்புப்
பாதையென ....
உன்னினைவோடு ...
தொடர்கிறதென் பயணம்.
பன்றிகளுக்கும்
நாய்களுக்கும் ....
கழுதைகளுக்கும் ....
குதிரைகளுக்கும் ....
கோட்டான்களுக்கும் ...
மாடுகளுக்கும் ...
மனிதர்களுக்கும் ...
இடையிலான கலப்புத்
திருமணத்தை
தடுத்து நிறுத்துவோம் .
இந்த முறைமீறிய
திருமணம் இங்கு
தேவையில்லை ...
தூய மனிதத்திற்க்குள்ளே...
சமயங்க லேது ...
சாதி தானேது ....
ஏற்றத் தாழ்வுதான்
எது ?
ஐந்தாம் பொருத்தம்
எல்லோரும் ஐந்தாம்
பொருத்தத்தை சோதித்துவிட
ஆளாய் பறக்கும்
போது அதைத்
தட்டிக்கழித்தவன் நீ .
நம் இல்லறம்
நல்லற மாவதற்கான
ஒத்திகையை நாளும்
உள்ளத்தில்
அரங்கேற்றம்
செய்கின்றவன் நீ.
வாழ்க்கைக்கான
கருப்பொருளை
தேனீக்கள் போல
சேமிகிறவன் நீ .
என் காதலும் நீ .
காவிய
நாயகனும் நீ .
ஐந்தாம் பொருத்தம் யோனி பொருத்தம் என்பது தெரியாதா என்ன உங்களுக்கு ...