இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 16 June 2012

13 .06 .2006



எல்லோருக்கும்
இயல்பாய்  விடிந்தது ...
எனக்குமட்டும்
புதுமையாய் பிறந்தது .

படிக்க வந்தேனா ....
படிப்பிக்க  வந்தேனா....
ஆயிரம்  ஐயங்கள்முன்னுள்.

நம்மிடையிலான  தொடர்புகள் ...
அன்றே  தோற்றங்க்கொண்டது.

வழமையான உன் ...
வெளிப்படையான
பேச்சை  சுவைப்பவள்  நான் .

கேட்டே வைத்தாய் ...
படிக்க வந்தாயா?
படிப்பிக்க  வந்தாயா?

என்பதிலே ...
உன்னை  மகிழ்வித்தத்து .

விடுமுறை  நாளில்
இருப்பை  விதவிதாமாய்
காட்டிக் கொண்டோம்.

கண்களில் காதலை
கடன் பெற்றோம் .

இதயத்தில் இடம்வாங்கி
குடியமர்ந்தோம்.

இன்றுவரை...
இணையாத  இருப்புப்
பாதையென ....

உன்னினைவோடு ...
தொடர்கிறதென்  பயணம்.

14 comments:

Prem S said...

//கண்களில் காதலை
கடன் பெற்றோம் //கடனா ஏனோ ?

MARI The Great said...

ரசிக்க வைத்தது.!

Unknown said...

13.06.2006 இது என்ன தேதி? பணியில் சேர்ந்த நாளா?

Unknown said...

அருமை அருமையான கவி அக்கா......

கவி அழகன் said...

அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் தளத்திற்கு வருகிறேன் !

நல்ல வரிகள் கொண்ட கவிதை ! தொடருங்கள் !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி நண்பரே !

MANO நாஞ்சில் மனோ said...

உன் நினைவுகளோடு தொடர்கிறதென் பயணம்//

சூப்பர் வரிகள், அசத்தல்...!

கோவி said...

கலக்குறீங்க..

அ. வேல்முருகன் said...

இருப்பு பாதை
இணையாக இருக்கும்

இதயம்
இணையத்தான் வேண்டும்

வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தொடரட்டும் அப்படியே இதுபோன்ற
அருமையான கவிதைகளும்...
ம்னம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்...

Athisaya said...

தொடருங்கள் உங்கள் படைப்புக்களை...அழகு

சத்ரியன் said...

கொடுக்கல்-காதல்-வாங்கல்.

Anonymous said...

பயணம் தொடரட்டும் நல்வாழ்த்து. இது ஒரு முக்கிய நாளென்று. (திருமண நாள்!)
வேதா. இலங்காதிலகம்.