ஆண் ,பெண் இனபேதம்
பார்க்காதவன் நீ.
இயற்கையின் படைப்பில்
அனைவரும் சமம்
என்கிறவன் நீ.
சாபங்களும்
சாபவிமோசனங்களும்
மனிதத்தை
முடமாக்குவன
என்கிறவன் நீ.
கருத்தியலை
அழித்தொழித்து
பொருளியலை
முன்னெடுக்கிரவன் நீ .
போர்க்குணம்
நிறைந்தவன் நீ.
எனக்குப்
பொருத்தமானவனும் நீ.