உன்கண்களை ...
நேரடியாக சந்திக்கும்
துணிவு எனக்கில்லை .
காதலில் வீழ்ந்து
விடக்கூடாது என்பதான
என் எண்ணம்
சிதைந்து கொண்டே
வருகிறது .
கருக்கொண்ட மேகம்
போல்... என்கண்கள்
காதலை காட்டிக்
கொடுத்துவிடுமோ
என அச்சப்படுகிறேன் .
என் கடுமையான
பணிச்சுமையின்
ஊடாகவும் உன்னை
நினைக்காமல்
இருக்கமுடியவில்லை .
நாளும் என்னுள்ளம்
உன்னைவிட்டு
வெகுதொலைவு
வந்துவிட்டதாய்
குமுறுகிறது .
அப்போதுதான் ...நீ ...
என்னுள் குடிகொண்டு
விட்டதை
நான் அறிந்து கொண்டேன் .
நம் வாழ்வில்
மலரைவிட மென்மையாகவே
உன்னுடனான தொடர்புகள்
இருக்கும் .
உன் வெற்றியின்
பாதை நோக்கியே
என்னுள்ளம்
இனி சிந்திக்கும் .
உனது ...
வெற்றியின் உச்சத்திற்காய்
ஏணிப் படிகாளாய் ...
என்னுடலும் உழைக்கும் .
உனதான ...
வலிகளை இனி
என்னிடம் சேர்த்துவிடு
இன்பங்களை மட்டுமே
அணிந்துகொள் .
இப்போதெல்லாம் ...
உன்நினைவு தரும்
சுகத்திற்காகவே நான்
தனிமையை
விரும்புகிறேன்.
இரும்பு இதயமா
உனக்கு ? என்
காதலை ஏற்ப்பதில்
என்னதயக்கம் .
நம்பிக்கை ...
துரோகம்
இழைத்துவிட்டதாய்
இந்த சமூகம்
உன்னை குற்றம் சாட்டும்
என அச்சப்படலாம் .
காந்த விசை
போன்றதான
என் காதலுக்கு
பச்சைக் கொடிகாட்டு .
இந்த கவிதை கூட ஒரு விதத்தில் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதுதான் . காரணம் இது நமது கவிதை இல்லை . நம்பிக்கையோடு படிக்க கொடுத்ததை பதிவேற்றம் செய்துவிட்டேன் .
பொறுத்துக் கொள்வீர்கள்
என்ற நம்பிக்கையுடன் ...
மாலதி .
நேரடியாக சந்திக்கும்
துணிவு எனக்கில்லை .
காதலில் வீழ்ந்து
விடக்கூடாது என்பதான
என் எண்ணம்
சிதைந்து கொண்டே
வருகிறது .
கருக்கொண்ட மேகம்
போல்... என்கண்கள்
காதலை காட்டிக்
கொடுத்துவிடுமோ
என அச்சப்படுகிறேன் .
என் கடுமையான
பணிச்சுமையின்
ஊடாகவும் உன்னை
நினைக்காமல்
இருக்கமுடியவில்லை .
நாளும் என்னுள்ளம்
உன்னைவிட்டு
வெகுதொலைவு
வந்துவிட்டதாய்
குமுறுகிறது .
அப்போதுதான் ...நீ ...
என்னுள் குடிகொண்டு
விட்டதை
நான் அறிந்து கொண்டேன் .
நம் வாழ்வில்
மலரைவிட மென்மையாகவே
உன்னுடனான தொடர்புகள்
இருக்கும் .
உன் வெற்றியின்
பாதை நோக்கியே
என்னுள்ளம்
இனி சிந்திக்கும் .
உனது ...
வெற்றியின் உச்சத்திற்காய்
ஏணிப் படிகாளாய் ...
என்னுடலும் உழைக்கும் .
உனதான ...
வலிகளை இனி
என்னிடம் சேர்த்துவிடு
இன்பங்களை மட்டுமே
அணிந்துகொள் .
இப்போதெல்லாம் ...
உன்நினைவு தரும்
சுகத்திற்காகவே நான்
தனிமையை
விரும்புகிறேன்.
இரும்பு இதயமா
உனக்கு ? என்
காதலை ஏற்ப்பதில்
என்னதயக்கம் .
நம்பிக்கை ...
துரோகம்
இழைத்துவிட்டதாய்
இந்த சமூகம்
உன்னை குற்றம் சாட்டும்
என அச்சப்படலாம் .
காந்த விசை
போன்றதான
என் காதலுக்கு
பச்சைக் கொடிகாட்டு .
இந்த கவிதை கூட ஒரு விதத்தில் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டதுதான் . காரணம் இது நமது கவிதை இல்லை . நம்பிக்கையோடு படிக்க கொடுத்ததை பதிவேற்றம் செய்துவிட்டேன் .
பொறுத்துக் கொள்வீர்கள்
என்ற நம்பிக்கையுடன் ...
மாலதி .