இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday 21 March 2013

உன்னமுதில் திகட்டி நிற்கிறேன் .

நீ  திறந்து காட்டிய 
உள்ளம் ...
என்னை கட்டிப்போட்டது .

நீ சுட்டிக் காட்டிய

செய்திகள்
என்னை  வட்டமிடுகிறது .

வாட்டம் கொண்ட

நான்  வளைந்து
நிற்கிறேன் .

காய்த்து  குலுங்கும்

கனியமுதாய்
மாற்றிக்  காட்டினாய் .

விண்ணை  முட்ட

உன்னமுதில்
திகட்டி  நிற்கிறேன் .

Tuesday 19 March 2013

தமிழகத்து  தெருக்களில் எல்லாம்
அரசியல் நரிகள் ...
ஊளையிடுகிறது .

காட்டிக்  கொடுத்தவர்
கண்டு கொள்ளாதவர் ...
நீலிக்கண்ணீர்  விட்டு 
நடிப்பு கட்டுகிறவர்கள்
பிணம் தின்னிக் கழுகுகள்
எல்லோரும் வேடமிடுகிரார்கள்

நாடாளுமன்ற  தேர்தல்
வந்து  தொலைக்கிறது
தமிழர்கள்  வாக்கு
பிச்சை  இடவேண்டும் .

ஈழ சிக்கலில்
போதுவாக்கெடுப்பே
சிறந்த  தீர்வு .

தன்னெழுச்சி  மிக்க
மாணவர் போராட்டம்

இனவுணர்வை ...
தட்டி  எழுப்பட்டும் .

மரபுவழிப்பட்ட
தமிழரின்  மறத்தனம்
உலகே அறியட்டும் .

மாணவர் போரட்டத்திக்கு
ஆதரவு  கொடுத்து
பலம் சேர்ப்போம்.