மாசற்றவனே உன் மதிமுகம் காட்டு
காலம் செதுக்கிய
புதுமை நீ.
கண்போல ...
காப்பவன் நீ .
வறுமையிலும்
அறம்பிழராதவன் நீ.
அச்சத்தை
உடைத்தெறிபவன் நீ.
அடக்குமுறைகளை
மிதிப்பவன் நீ
ஆளப்பிறந்தவன் நீ.
அறிவை ஏற்ப்பவன் நீ.
உழைப்பை
போற்றுகிறவன் நீ .
மறத்தமிழன் நீ.
மாறக் கோட்பாடுகளை
உடையவன் நீ.
மாசற்றவனே உன்
மதிமுகம் கட்டு
2 comments:
அருமை...
பலநூறு முறை அக்கினி எழுத்துக் கவியை எதிர் பார்த்து வலைத்தளத்தில் வந்து சென்றேன். இன்று ஏதோ பார்க்கலாமே என்று கண்ட போது அக்கினிக் கவியின் தொகுப்பினை பார்த்ததும் மனம் பெருமூச்சு விட்டது.
சகோதரி உணர்வுகளுக்கு மிஞ்சியது ஏதுமில்லை. அந்த உணர்வுகள் அனுபவங்கள் மூலமே கிடைக்கும். (அது கசப்போ இனிப்போ )உணர்வுகளே எழுத்துக்களை உருவாக்கும். தங்களுக்கு தெரியாதது ஏதுமில்லை தற்போது . வாருங்கள் , எழுதுங்கள் உங்கள் எழுத்துக்களை (சு)வாசிக்க எத்தனையோ நல் இதயம் காத்திருகிறது. http://dooritwilldo.blogspot.in/2013/05/blog-post_25.html
Post a Comment